districts

img

திருப்பரங்குன்றத்தில்  தமுஎகச கலைமாலை

மதுரை, ஜூன் 20-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள்  சங்கத்தின் சார்பில் கலைமாலை நிகழ்ச்சி திருப்பரங் குன்றம் 16 கால் மண்டபம் அருகில் கிளைத்தலைவர் த. காமாட்சி தலைமையில் நடைபெற்றது. கிளை துணைச்  செயலாளர் சி.சேதுராமன் வரவேற்றார். ஜெகநேசன், வசந்தகுமார், கார்த்திக் ஆபிரகாம், ஆகியோர் முன்னிலை  வகித்தனர். கரிசல் கருணாநிதி, பசுமலை செல்வம், விடி யல் சந்திரன் குழுவினரின் பாடல்கள்,கவிஞர் ஜீவி தலை மையில் கவிதை வாசிப்பு இடம்பெற்றது. திருநகர் வணலி  பாட்டியாலா குழுவினரின் பரதநாட்டியம், நுவ்வை மற்றும் வினவு குழுவினரின் நாடகம் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.வேலாயுதம் விளை யாட்டு அமைப்புகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை பாராட்டி,பரிசுகள் வழங்கினார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். கிளை  பொருளாளர் மு.சுந்தரம் நன்றி கூறினார். முன்னதாக பறை யிசை முழங்க சங்கத்தின் மாவட்டத்தலைவர் கரிசல் கரு ணாநிதி திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். சேகுவேரா வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி யை மாவட்டச் செயலாளர் மீ.லெனின் திறந்து வைத்தார்.கிளைத் துணைச்செயலாளர் பா.முத்துஅழகேசன் நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கினார்.

;