districts

img

தனியாருக்கு விற்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் நிலத்திற்கான தொகையை மாநில அரசுக்கு வழங்கிடுக!

மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு

சென்னை,டிச.31-   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக வலிமையான போ ராட்டங்கள் நடந்துவருகின்றன. இருப்பினும் மோடி அரசு தனியார்மயப் பாதையில் மூர்க்கத் தனமாக பயணிக்கிறது. இதன் காரணமாக மாநிலங்களும் பாதிக்கப்படுகின்றன. அதனை சுட்டிக்காட்டி தமிழ்நாடு நிதிய மைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் , மாநில நிதியமைச் சர்கள் கூட்டத்தில் பேசியிருப்பது வரவேற்பிற்குரியதாகும். ஒன்றிய அரசின் பொதுத் துறை களுக்கு, மாநில அரசாங்கம் நிலம் உள்ளிட்ட வளங்களை இலவச மாகவோ அல்லது குறைந்த விலை யிலோ வழங்குகிறது. மேலும்,  மக்களிடமிருந்து நிலம் கையகப் படுத்தியும் தரப்படுகிறது. அந்த நிறுவனங்களை தனியாருக்கு அடிமாட்டு விலையில் தாரை வார்க்கிறார்கள். தனியார் முதலா ளிகள் அவைகளை முழுமையாக பயன்படுத்தி வருவாயும், கொள்ளை லாபமும் ஈட்டுகிறார் கள். ஆனால் இதனால் மாநில அர சாங்கங்களுக்கு எந்த வருவாயும்  கிடைப்பதில்லை என்பதுடன் மக்க ளுக்கு இழப்பும் ஏற்படுகிறது. எனவே, பொதுத்துறை நிறுவ னங்களை  தனியாருக்கு விற்கும் போது “மாநில அரசுக்கு நிலத்தின் சந்தை மதிப்பிலான விலையை கொடுத்து ஈடு செய்ய வேண்டும். அல்லது அந்த நிறுவனங்களில் நிலத்தின் மதிப்பிற்கு நிகரான பங்கினை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்” என தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தியி ருக்கிறார்.  பொதுச் சொத்துக்கள் வரன் முறையில்லாமல் தனியார்மயப் படுத்தப்படும் இந்த சூழலில் தமிழ்நாடு நிதியமைச்சர் முன்வைத் திருக்கும் இந்தக் கருத்து வர வேற்கத்தக்கது ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை,டிச.31-  ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு சலுகை விலையிலோ அல்லது இல வசமாகவோ நிலங்களை வழங்கியது. தனியாருக்கு விற்கப்பட்ட இந்த நிறு வனங்களின்  நிலங்களுக்கான தற் போதைய சந்தை மதிப்பு விலையை நியாயமான இழப்பீடாக மாநில அர சுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து விவாதிக்க மாநில அரசுகளின் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக் கப்பட்டன.  இதுகுறித்து ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் எழுதியுள்ள கடிதம் வருமாறு :

 செஸ் மற்றும் இதர வரிகள் கடந்த 10 ஆண்டுகளில் (2010 – 11ல் 6.26  சதவீதம் இருந்து 2020-21 ல் 19.9 சதவீதம்) மூன்று மடங்கு அதி கரித்துள்ள போதும் இந்த வரி மொத்தமும் மாநில அரசுடன் பகி ரப்படாமல் ஒன்றிய  அரசின் கட்டுப் பாட்டில் உள்ளதால் மாநிலங்க ளுக்கு 20 சதவீதம் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநில சுயாட்சியின் முக்கியத் துவத்தை உணர்ந்து நிதி ஆதாரங்க ளை ஒன்றிய  மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வதையும் மாநிலங்களுக்கு சில வரிவிதிப்பு அதிகாரத்தையும் நமது அரசியல மைப்புச் சட்டம் உறுதிப்படுத்தி யுள்ளது. இருந்தபோதும், செஸ் மற்றும் இதர வரிகள் மூலம் கிடைக்கும் வரு வாய் மாநிலங்களுடன் பகிரப்படாமல் இருப்பதால் 2021-22 நிதியாண்டில் மட்டும் மாநிலங்களுக்கு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. சமநிலையில்லாமல் ஒன்றிய அரசிடம் இவ்வாறு குவிக்கப்படும் அதிகாரம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உண்மையான நிதி கூட்டாட்சி முறைக்கு எதிரானது.  ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் 2020 – 21 ல் நேரடி வரி வருவாயை மிஞ்சியுள் ளது. சமச்சீரற்ற மிகவும் பிற்போக் குத் தனமான இந்த மறைமுக வரி கள் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகி றார்கள். நேரடி மற்றும் மறைமுக வரிக ளுக்கு இடையே 60 க்கு 40 என்ற விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.  

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி க்கு உதவ, குறைந்த வட்டியில் கடன்  வழங்கும் மத்திய முதலீட்டு நிறுவனங் கள் மாநில அரசின் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களுக்கு கடன் வழங்க முன்வர வேண்டும். குறைந்த வட்டியில் பணம் வழங்கும் இந்த ஒன்றிய அரசு நிறு வனங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொழில்முனைவோருக்கு கடன் வழங்கும் தமிழக நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதில்லை, தொழில் வளர்ச்சி மேம்பட உடனடியாக நிதி வழங்க உத்தரவிட வேண்டும். ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் திட்டங்க ளுக்காக கடந்த காலங்களில் தமிழக அரசு சலுகை விலையிலோ அல்லது இலவசமாகவோ நிலங்களை வழங்கியது. தனியார் மயமாக்கலின் போது விற்கப்பட்ட இந்த நிலங்களுக்கான தற்போதைய சந்தை மதிப்பு விலையை நியாய மான இழப்பீடாக மாநில அரசுக்கு வழங்க வேண்டும் அல்லது அந்த மதிப்பிற்கு இணையான பங்குகளை புதிய நிறுவனங்களில் வழங்க வேண்டும்.  வெளிநாட்டு நிதி மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள் ஆண் டொன்றுக்கு ஒரு மாநிலத்திற்கு ஒரு திட்டத்திற்கு மட்டுமே அனுமதி என்று மத்திய நிதி அமைச்சகம் தற்போது விதித்துள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.

வெளிநாட்டு நிதி உதவித் திட்டங்க ளை பெறுவதிலும் அதனை திறம்பட செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு நம்பகமான மாநிலமாக உள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள் மூலம் தமிழ்நாட்டில் புதிய திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதி கிடைக்காமல் போவதோடு திறன் மற்றும் செயல்படுத்தும் தன்மை யைப் பொறுத்து மற்ற மாநிலங்களு க்கு கிடைக்கப்பெறும் நிதி மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதால் இந்தியாவுக்கான மொத்த வெளி நாட்டு நிதி உதவியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இந்த கட்டுப்பாட்டை நீக்கி சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் வளர்ச்சி யை ஒன்றிய அரசு மேலும் ஊக்கப் படுத்த வேண்டும்.  தமிழ் நாட்டில் கிடப்பில் போடப் பட்டுள்ள ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு வழங்கவேண்டிய நிதியை வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பல புதிய ரயில்வே திட்ட பணிகளை வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.   இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.