தூத்துக்குடி, அக். 29 2022 - 23 முதல் அரை நிதி யாண்டில் தமிழ்நாடு மெர்க்கண் டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.496.51 கோடியாக அதிகரித்துள் ளது. வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருட காலத்திற்கு மேலாக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 509 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகிய வற்றை கொண்டுள்ளது. நாட்டில் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ மில்லிய னுக்கும் அதிகமான வாடிக்கையா ளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. சென்னையில் வெள்ளியன்று நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2022 - 23 முதல் அரை யாண்டின் நிதிநிலை தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதி காரி எஸ். கிருஷ்ணன் தணிக்கை செய்யப்பட்ட முதல் அரை யாண்டு நிதிநிலை அறிக்கை யினை வெளியிட்டார். பொது மேலா ளர்கள், தலைமை நிதி அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். 2022 -23 முதல் அரைநிதி யாண்டில் வங்கியின் செயல் பாட்டினை விளக்கும் சிறப்பம் சங்கள்
2022-23 முதல் அரை நிதி யாண்டில் வங்கியானது பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்துள்ளது. இதற்கு வங்கியின் திட்டமிட்ட நேர்த்தியான கொள்கைகளும், இயக்குனர் குழு தரும் உற்சாகம், உயர் நிர்வாகக் குழுவின் சீரிய திட்டம் மற்றும் அதனை செயல்படுத்தும் அணுகு முறை, வங்கி ஊழியர்களின் அய ராத உழைப்பு மற்றும் இவற்றி ற்கு எல்லாம் மேலாக வாடிக்கை யாளர்கள் தொடர்ந்து தரும் பொன்னான ஆதரவு ஆகியவை தான் இச்சாதனைகளை எட்டிட உதவியது என்றால் அது மிகை யாகாது. 2022-23 முதல் அரை நிதி யாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 7.43சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.78,013.12 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகை ரூ.43,163.65 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடன்களை பொறுத்தமட்டில் ரூ.34,876.53 கோடி என்ற நிலை யில் உள்ளது. நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகை (CASA) 15.32% வளர்ச்சி அடைந்து ரூ.13,192.64 கோடியாக உள்ளது
கடன் வழங்கல் துறை
வங்கியானது விவசாயம், குறு, சிறு தொழில் கடன், வியாபா ரக் கடன், வீட்டுக் கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2022-23 முதல் அரை நிதி யாண்டில் முன்னுரிமைத் துறை களுக்கு (Priority Sector) வழங்கப் பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.22,878.78 கோடியில் இருந்து ரூ.25,079.09 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 9.61சதவீதம் ஆகும். முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40சதவீதம் என்ற இலக்கை விட அதிகமாக 66.64 சதவீதம் என்ற விகிதத்தில் உள்ளது. விவசாயத் துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.10,386.43 கோடியாக உள்ளது. விவசாய துறைக்கு, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவு 18 சதவீதம் மட்டுமே ஆகும். இத்துறைக்கு வங்கி மொத்த கடன்களில் 29.78 சதவீதம் கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. MSME துறைகளுக்கு வழங்கப் பட்ட மொத்த கடன்கள் ரூ.11,662.74 கோடியில் இருந்து ரூ.12,689.76 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 8.81% ஆக உள்ளது.