நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய பஞ்சப்படியை உடனடியாக வழங்கக் கோரி ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் நல அமைப்பு சார்பில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் ஜெயபாண்டி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் கிருஷ்ணன், பொதுச்செயலாளர் ஜேம்ஸ் கஸ்பர்ராஜா ஆகியோர் பேசினர்.