districts

img

மதுரை முக்கிய செய்திகள்

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

 தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையில் செவ்வாய்கிழமை (அக். 31) அன்று மாலை 6.30 மணிக்கு  அமைச்சரவைக் கூட்டம் நடைபெறு கிறது.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. வரும் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதால், புதிய  தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல்  குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப் பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஆளுநர் விவகாரம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக் கப்படும் என்று எதிர்பார்க்கப்படு வதால், இந்தக் கூட்டம் அதிக முக்கியத் துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

முதல்வருக்கு  அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்

சென்னை, அக்.30- உயிர்காக்கும் உன்னத பணியை  மேற்கொள்ளும் அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கையை அரசு உடனடி யாக நிறைவேற்ற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சி  தலைவர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே, அக்டோபர் 31 அன்று  நடை பெறும் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில், கொரோனாவால் உயிரி ழந்த அரசு மருத்துவர் விவேகானந் தன் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் அறிவிப்பையும் கலை ஞரின் அரசாணை 354 அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் மரு. எஸ். பெருமாள் பிள்ளை அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்

பாஜக நிர்வாகிக்கு  போலீஸ் காவல்.

சென்னை, அக்.30- பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை விசாரிக்க 5 நாள் போலீஸ் காவல் கோரிய நிலையில் ஒரு நாள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து 3 வழக்குகளில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி  கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கொடிக் கம்பத்தை அகற்றும்போது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் அமர் பிரசாத் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள்  போலீஸ் காவல் 

கடந்த 25 ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீ சப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் புழல் சிறை யில் அடைக்கப்பட்டார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கிண்டி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், திங்களன்று (அக்.30) புழல் சிறை அதிகாரிகள் பலத்த காவல் பாதுகாப்புடன் கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் 9-வது அமர்வு பொறுப்பு  நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தி னர். இதையடுத்து போலீசார் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கருக்கா வினோத்தை காவலில்  எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதன்படி கருக்கா வினோத்தை வருகிற நவம்பர் 1 ஆம்  தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து  விசாரிக்க அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இதையடுத்து கிண்டி காவலர்கள் அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்கான பணிகளில்  ஈடுபட்டு வருகின்றனர்.