சிவகங்கை, அக்.4- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பைக்குடி அரசு உயர் நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் அ.பாலுமுத்து வழிகாட்டு தலின்படி தமிழ்க் கூடல் தொடக்க விழா நிகழ்வு நடை பெற்றது. நிகழ்விற்கு பள்ளி தலை மையாசிரியர் முனைவர் ஜ. ஈஸ்வரி தலைமை வகித்தார். தமிழாசிரியர் ராஜமோகன் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும் உல கத் திருக்குறள் கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவரு மான ஆறு.மெய்யாண்டவர் முன்னிலை வகித்தார், ‘அறிவெனப்படுவது யாதெனின்’ என்னும் தலைப் பில் ஆசிரியர் பயிற்றுநரும் தொல்லியல் ஆய்வாளரு மான புலவர் கா.காளிராசா பேசினார்.