தூத்துக்குடி, அக்.17- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் உடன்குடி ஒன்றிய மாநாடு உடன்குடியில் நடைபெற் றது. இந்த மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் நேரு தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் சங்கர் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பாண்டி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த மாநா ட்டை துவக்கி வைத்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடன்குடி ஒன்றிய செயலா ளர் ஆறுமுகம் பேசினார். மாநாட்டை நிறைவு செய்து விவசாய தொழிலாளர் சங் கத்தின் மாவட்டச் செயலா ளர் கு.ரவீந்திரன் பேசினார். தலைவராக ஆதிநாரா யணன், செயலாளராக கந்த சாமி, பொருளாளராக சக்தி வேல், துணைத்தலைவராக பேச்சியம்மாள் ,துணைச் செயலாளராக நேரு உள் ளிட்ட 10 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட் டது. மாநாட்டில் உடன்குடி ஒன்றியத்தில் நிலத்தடி நீரின் உப்பு நீர் தன்மையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண் டும், 100 நாள் வேலைக்கான சட்டக்கூலி ரூபாய் 284 முழு மையாக வழங்க வேண்டும், ஜெஜெ நகர் பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ஆதிநாரா யணன் நன்றி உரையாற்றினார்.