districts

img

தே.கல்லுப்பட்டி 4-ஆவது வார்டு மக்கள் குறைகள் தீர்க்கப்படும் சிபிஎம் வேட்பாளர் உறுதி

மதுரை, பிப்.10- மதுரை மாவட்டம் தே.கல்லுபட்டி பேரூராட்சி 4-ஆவது வார்டில் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளின் ஆதரவு டன் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வி வாக்கு சேகரித்தார்.  வாக்காளர்களிடம், மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவு நீர் வாய்க்கால்கள் இல்லாத பகுதிகளில் அமைத்து கொடுக்கப்படும். மோசமாக உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் புனர மைக்கப்படும்.  ‘‘வீட்டு வரி, குப்பை வரிகளில் உள்ள பிரச்சனையில் வாக்காளர்கள் கூறும் நியா யமான கோரிக்கைகள் மக்கள் மன்றத்தில் முன்வைத்து உரிய தீர்வு காணப்படும்’’ என்றார்.  வாக்கு சேகரிப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பி னர் சி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஏ.இளங்கோவன், வி.முரு கன், ஒன்றியச் செயலாளர் வி.சமயன், மணிகிருஷ்ணன், சிஐடியு மாவட்டத் தலை வர் செ.கண்ணன், மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்விக்கு ஆதரவாக திமுக சார்பில் 3-ஆவது வார்டில் போட்டியிடும் வேட்பா ளர் குமரேசபாண்டியனும் வாக்கு சேக ரித்தார்.