districts

img

மின்சாரத்துக்கு மாறுவோம் : வாகன பிரச்சாரம் தொடக்கம்

தூத்துக்குடி, டிச.12- தூத்துக்குடியில் ‘‘மின்சாரத்துக்கு மாறுவோம்’’ என்ற பிரச்சார வாகனத்தை மேற்பார்வை பொறியாளர் தாரா கொடி யசைத்து தொடங்கிவைத்தார். மின்சார வாகனங்களின் பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு, மின் அடுப்புகள் மூலம் சமையல் செய்வது போன்றவற்றின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மின்சாரத்துக்கு மாறுவோம் என்ற பிரச்சாரத்தை மின் துறை அமைச்சகம் நாடு முழுவதும் செய்து வருகிறது.  அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார வாகனத்தை மேற்பார்வை பொறியாளர் தாரா கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், ‘‘Go- Electric compaign’’ எனும் திட்டத்தின் மூலம் ஒலி, ஒளி  மற்றும் கை பிரதிகள் சென்றடையவும், டிஜிட்டல் பேனர் பொருத்திய இலகுரக வாகனம் அமைக்கப்பட்டு டிச.10, 11, 12 ஆகிய மூன்று தினங்களில் தூத்துக்குடி மின் பகிர்மான  வட்டத்தின் அனைத்து முக்கிய பகுதிகளுக்கும் செல்லும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.