மதுரை, ஏப்.11- இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வேரோடு வீழ்த்து வோம் என்று மதுரையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் வைகோ பேசினார்.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதிமுக பொ துச்செயலாளர் வைகோ ஏப்ரல் 10 புதன்கிழமையன்று மாலை ஓபுளா படித்துறை பகுதியில் வாக்குச்சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் வைகோ பேசியதாவது:
மதுரை தொகுதியில் போட்டியிடுகிற அருமைச் சகோதரர் சு.வெங்கடேசனை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றிபெறச் செய்யப் போகி றார்கள் என்பதை இங்கே திரண்டிருக்கிற மக்கள் கூட்டத்தின் மூலம் பார்க்கிறேன்.
எதற்காக 8 முறை வந்தீர்கள்?
இந்தியாவினுடைய வரலாற்றில் இது முக்கியமான காலகட்டம். எதிர்காலத்தில் இந்தியாவில் ஜனநாயகம் இருக்குமா? சர்வாதிகாரம் ஓங்குமா?; பாசிசமா? ஜனநாயகமா?என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தல். இந்திய பிரதமர் மோடி தமிழ் நாட்டிற்கு 8 முறை வந்துவிட்டார்.பெரும் மழைவெள்ளம், புயலால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு கண்ணீரும் கம்ப லையுமாக கதறினார்களே, அப்போது வந்தீர்களா பிரதமர் மோடி அவர்களே? வயல்வெளிகள் பாழாகி, கையறு நிலையில் மக்கள் நின்றபோது, அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பிரதமருக்கு வந்ததா? பிறகு எதற்கு 8 முறை தமிழ கத்திற்கு வந்தீர்கள்? இது கேள்வி கேட்பார் இல்லாத நாடு என்று நினைத் தீர்களா?
மோடியின் கனவு
ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர், இந்துத்துவா இயக்கத்தினர், இந்தியா என்ற பெயரை மாற்றி, பாரத் என அழைக்க வேண்டும் என்று சொல்கின்ற னர். இந்துக்கள் மட்டும்தான் வாழ வேண்டும். முஸ்லிம்களுக்கு இடமில்லை. அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்கிறார்கள். தற்போதைய அரசிய லமைப்புச்சட்டத்தை தூக்கியெறிந்து விட்டு, புதிய அரசியலமைப்புச்சட்டத்தை இயற்றுவோம் என்று வாரணாசியில் கூடிய இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தோர் வலியுறுத்துகிறார்கள்.
ஆனால் மோடி என்ன கனவு காண்கிறார் தெரியுமா? நாடாளுமன்ற ஜனநாயக முறையை மாற்றிவிட்டு, அமெரிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையைப் போல் கொண்டுவந்துவிட்டால், ஜனாதிபதி ஆகிவிடலாம் ; பதவிக்காலத்தை 7 ஆண்டுகள் ஆக்கிக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மூன்று துண்டுகளாக்கிப் போட்டுள்ளது மோடி அரசு.
இந்தியாவே ஆச்சரியப்பட்ட திட்டம்
பல அரசியல் கட்சிகள்,பல்வேறு கருத்துக்களை கொண்டவர்கள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது இந்தியா கூட்டணி.இந்த கூட்டணியின் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் கள் அனைவரும் தேடி வந்து பார்த்து, ஆலோசனை கேட்டது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்தான். வாடிய முகத்துடன் இருந்த குழந்தைக ளுக்காக பள்ளிகளில் காலை உண வுத்திட்டத்தை கொண்டுவந்தார். இத்திட்டத்தைக் கண்டு இந்தியாவே ஆச்ச ரியப்பட்டது. இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், கனடா நாட்டிலும் இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளனர்.
வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகளை ஈர்த்துக்கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர். இதன்மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்திற்கு எந்த நிதியும் தருவதில்லை,வெள்ளம் புயல் நம்மை சூழ்ந்துகொண்டு தாக்கிய போது கூட நிதி தரவில்லை. குஜராத்திற்கு தருகின்ற பணம், பீகாருக்கு தருகின்ற பணம்,உத்தரப்பிரதேசத்திற்கு தருகின்ற பணம் தமிழகத்திற்கு தருவதில்லை.பாஜக தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாத வகையில், வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்றி வீழ்த்த வேண்டும்.
லட்சிய வீரர் சு.வெங்கடேசன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான தோழர் சு.வெங்கடே சன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நான் கவனித்திருக்கி றேன். எழுப்ப வேண்டிய கேள்விகளை யெல்லாம் எழுப்பி,பேச வேண்டிய பிரச்சனைகளையெல்லாம் பேசியவர்.பொதுவாழ்வில் கண்ணாக இருந்து, மதுரைக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்,தொகுதிக்கு நல்ல திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்பதற்காக பாடுபடுகிற லட்சிய வீர ரைத்தான் எம்.பி.யாக தேர்ந்தெடுத்து அனுப்பினீர்கள். இந்த தேர்தலிலும் அதே சு.வெங்கடேசன்தான் போட்டியிடுகிறார்.எனவே ஏப்ரல் 19அன்று உங்கள் பொன் னான வாக்குகளை அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் அளிக்க வேண்டும். லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணியின் மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன் வென்றார் என்ற புகழை ஏற்படுத்தித் தருமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.