மதுரை, டிச.30- மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கக் கோரி டிசம்பர் 30 வெள்ளி யன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.கரும்புக ளுடன் விவசாயிகள் கலந்துகொண்ட னர். மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் பயன் பெறும் வகையில் மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது.இந்த ஆலை கடந்த 10 ஆண்டுகளாக ஆலை செயல் படவில்லை. ஆலையை திறந்து இயக்கக்கோரி தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் 2021 ஆம் ஆண்டில் பல்வேறு போராட்டங்களை நடத்தி யது. 46 நாட்கள் கரும்பு விவசாயிகள் ஆலையின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இதன்பின்னரே தமிழக வேளாண்துறை அமைச்சர் சட்ட மன்றத்தில் 2022-2023 - ல் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்கப்படும் என்று அறிவித்து, ஆலை யினை ஆய்வு செய்ய கமிட்டி அமைக் கப்பட்டது. இந்த கமிட்டி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து 3 மாத மாகியும் தமிழக அரசு ஆலையினை திறக்க எந்த விதமான நடவடிக்கை யும் எடுக்கவில்லை. ஆலை இயக்கப் படாமல் மூடிக்கிடப்பதால் இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள 2000 ஏக்கர் மற்றும் பதிவு செய்யாத 1500 ஏக்கர் கரும்பு வீணாகும் நிலை உள்ளது .
இந்நிலையில் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறந்து இயக்க வேண்டும். இதர பிரிவு தொழி லாளர்களை பாதுகாத்திட தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கம் சார்பில் டிசம்பர் 30 வெள்ளி யன்று மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்கத் தின் மாநில துணைத் தலைவர் என். பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கரு.கதிரே சன், பொருளாளர் கே.மொக்கமாயன், மாவட்ட நிர்வாகிகள் என். ஸ்டாலி ன்குமார், பி.எஸ். இராஜாமணி, பி. நாராயணன், பி. போஸ், ஏ. ராமராஜ், எம்.எஸ். அய்யாக்காளை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பி. இளங்கோவன், மாவட்டத் தலைவர் வேல்பாண்டி ,மேலூர் தாலுகா தலை வர் வி. அடக்கிவீரணன் ,செயலாளர் ஏ. இராஜேஸ்வரன் மற்றும் திருமங்க லம், மட்டப்பாறை, மதுரை கிழக்கு, செக்கானூரணி, அருப்புக்கோட்டை, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளை காவல்துறை யினர் கைது செய்தனர்.