விருதுநகர், ஜன.4- விருதுநகரில் 3 மாதம் ஊதியம் வழங்காத கார ணத்தால் கழிவு நீர் சுத்திக ரிப்பு நிலையத்தை பூட்டி சாவியை நகராட்சி அலுவல கத்தில் ஒப்பந்தக்காரர் ஒப்ப டைத்தார். மாவட்டத் தலைநகரான விருதுநகரில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 25 ஆயி ரம் வீடுகள் உள்ளன. இதில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற் பட்ட வீடுகளில் பாதாள சாக் கடை இணைப்புகள் உள் ளன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது கழிவு நீரேற்று நிலையத்தில் உள்ள கிணறுகளில் விழும். பின்பு, அங்குள்ள மோட் டார்கள் மூலம் பம்ப் செய் யப்பட்டு ராட்சத குழாய்கள் வழியாக மாத்தநாயக்கன் பட்டி சாலையில் உள்ள கழிவு நீரேற்று நிலையத்தில் உள்ள தொட்டிகளில் கழிவு நீர் விழுகிறது. இதையடுத்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, நல்ல நீராக மாற்றப்பட்டு அரு கில் உள்ள கௌசிகா ஆற் றில் விடப்பட்டு வந்தது. கழிவு நீரேற்று நிலை யங்களில் மோட்டார்களை இயக்குவது, சுத்திகரிப்பு நிலையங்களில் சேரும் மண் களை அகற்றுதல், மோட் டார்களை இயக்குதல் மற் றும் கழிவு நீரை ஆய்வு செய் தால் ஆகிய பணிகள் ஒப்பந்த காரர் மூலம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பே ஒப்பந்த காலம் நிறைவடைந்துவிட்ட நிலை யில், விதிமுறைப்படி கால நீட்டிப்பும் செய்யவில்லை. ஒப்பந்தக்காரருக்கு தற் போது வரை வேலை செய்த தற்கான பணமும் வழங்க வில்லையென கூறப்படு கிறது.
இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே, சுத்திகரிப்பு நிலை யத்தை பராமரித்து வந்த ஒப்பந்தக்காரர், சுத்திகரிப்பு நிலையத்தின் சாவியை புத னன்று நகராட்சி அலுவல கத்தில் ஒப்படைத்து விட் டார். இதனால் விருதுநகர் நகராட்சி பகுதி முழுவதும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்து பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீருடன் கழிவு நீரும் கலக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நக ராட்சி ஆணையாளர், பொறியாளர் மற்றும் நக ராட்சி தலைவர் ஆகியோர் ஆலோசனை செய்தனர். அதில், ஏற்கனவே சுத்தி கரிப்பு நிலையத்தில் பரா மரிப்பு பணி மேற்கொண்ட ஒப்பந்தக்காரருக்கு கால நீட்டிப்பு செய்திட முன் அனு மதி வழங்குவது என முடிவு செய்தனர். பின்பு, ஒப்பந் தக்காரரை அழைத்து மீண் டும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சாவியை ஒப்ப டைத்தனர்.