districts

img

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரை சந்தித்து சு.வெங்கடேசன் எம்.பி., வாழ்த்து

மதுரை, செப்.11-  மதுரை அலங்காநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ் குமார், தேசிய நல்லாசிரியர் விருது பெற்றார்.  இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு  உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் ஞாயி றன்று ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரை மேலப்பொன்னகரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து  பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரி வித்தார். நிகழ்வில், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மத்திய - 1 ஆம் பகுதிகுழு செயலாளர் வை.ஸ்டாலின், மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்மாள், வாலி பர் சங்க பகுதி குழு தலைவர் ஆஷாத், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா.நர சிம்மன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ. பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.