districts

img

வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆய்வு

தூத்துக்குடி, பிப்.12- திருச்செந்தூர், நாசரேத், சாயர்புரம், கழுகுமலை ஆகிய பகுதிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், நாசரேத், சாயர்புரம், கழுகுமலை ஆகிய பகுதிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர்;  கி.செந்தில்ராஜ்,  வெள்ளியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருச்செந்தூர் நகராட்சி வாக்கு எண்ணிக்கை மையமான வீரபாண்டியபட்டணம் புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி, நாசரேத் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை மையமான நாசரேத் பிரகாசபுரம் புனித மரியன்னை நடுநிலைப்பள்ளி, சாயர்புரம் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை மையமான சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரி மற்றும் கழுகுமலை பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை மையமான கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணும் இடங்கள், காத்திருப்பு அறை, இருப்பு அறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.