districts

img

சமூக அறிவியல் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கக்கோரி மாணவர் சங்கத்தினர் பேரணி

மதுரை, ஆக.9-  மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிவரும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக சமூக அறிவியல் கல்லூரியை அரசு கல்லூரியாக அறி விக்க வேண்டும் என்று வலியுறுத்தி யும் புதனன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் பேரணி நடை பெற்றது. சமூக அறிவியல் கல்லூரி வளா கம் அருகில் இருந்து புறப்பட்ட பேர ணிக்கு மாவட்ட தலைவர் டேவிட் தலைமை வகித்தார். மாநிலத் தலை வர் ஜி. அரவிந்த்சாமி, மாவட்ட செய லாளர் க. பாலமுருகன் மற்றும் மாண வர்கள் கலந்துகொண்டனர் . பேரணி  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நிறைவு பெற்றது.  பேரணிக்கு முன்னதாக செய்தி யாளர்களிடம் மாநிலத் தலைவர் ஜி. அரவிந்த்சாமி கூறுகையில், “பாது காப்பான இந்தியா, கல்வியை பாது காப்போம், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்.” என்ற முழக்கத்துடன் இந்திய மாணவர் சங்கம் ஆஷாதி பேரணியை துவங்கி யுள்ளது. மதுரை காமராஜர் பல்க லைக்கழக கல்லூரிகளில் சில தனி யார் முதலாளிகள் பெரும் லாப நோக்கத்தோடு செயல்பட்டு வருகி றார்கள். எனவே கல்லூரியை பாது காத்திடும் நோக்கத்தில் அரசு கல்லூ ரியாக தமிழக அரசு அறிவித்திட வேண்டும். மாணவர்களிடம் பெரும்  கொள்ளையை கல்லூரி நிர்வாகம் நடத்தி வருகின்றது. இதை தடுக்க வேண்டும் என்று இந்த பேரணி நடத்தப்படுகிறது என்றார்.  தொடர்ந்து மாவட்ட ஆட்சியரி டம் கோரிக்கை மனுவை வழங்கி னர்.  பேரணியில் மாவட்ட துணை செயலாளர் பி. சுபாஷ், ராஜா. கிளை  நிர்வாகிகள் ரீகன், தினேஷ், சதீஷ், ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.