திருவில்லிபுத்தூர், மார்ச்.10- மேய்ச்சலுக்கு நாட்டு மாடு களை வனப்பகுதிக்குள் அழைத் துச் செல்லக்கூடாது என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்த ரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். புதிதாக அமைய உள்ள புலிகள் சரணாலயத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வியாழனன்று விருதுநகர் மாவட் டம் திருவில்லிபுத்தூர் மாவட்ட வன உயிரின காப்பாளர் அலுவல கம் அருகே நாட்டு மாடு உரிமை யாளர்கள் போராட்டம் நடத்தி னர். இதனையடுத்து வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நாட்டு மாடு உரிமை யாளர்கள் தங்களின் கோரிக்கை மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ முன்னாள் எம்எல்ஏ ராமசாமி தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பின ரும் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவருமான ஜெய முருகன் விளக்கிப் பேசினார். சிபிஐ மாவட்ட செயலாளர் லிங் கம், நகர செயலாளர் மூர்த்தி சௌந்தரபாண்டியன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் திரு மலை, ஜெயக்குமார், நகரச் செய லாளர் ஜெயக்குமார், நாட்டு மாடு வளர்ப்போர் சங்க நிர்வாகிகள் முத்துராஜ், ராதாகிருஷ்ணன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.