இராஜபாளையம், ஜன.10- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சங்கரன்கோவில் விலக்கு பகுதியில் ஆறு தெருக்கள் உள்ளன. இங்கு கடந்த 15 தினங்களாக குடிநீர் வரவில்லை. அதே நேரத்தில். அருகிலுள்ள தோப்புப்பட்டி தெரு, ஸ்ரீரங்கபாளையம் தெரு போன்ற பகுதிகளுக்கு எட்டு தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படு வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் இரு வாரங்களாக இந்த ஆறு தெருக்களிலும் குடிநீர் வராததால் மக் கள் காலிக் குடங்களுடன் சங்கரன்கோவில் விலக்கு பகுதியில் சாலை மறியல் நடத்தினர்.