districts

img

திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி

திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் 800-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. 12 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் நத்தம்- அய்யனார்புரம் சர்வசேவா ஸ்பேரோஸ் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிச் செயலாளர் வசந்தா, முதல்வர் சண்முககுமார், சிலம்ப ஆசிரியர் சங்கர், ஆசிரியர்கள் பாராட்டினர்.