திண்டுக்கல், மார்ச் 24- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஒன்றியம் நாகம் பட்டி ஊராட்சி அய்யனார் நகரில் 50 ஆண்டுகளுக்கு மேல் குடி யிருந்துவரும் குறவர் இன மக்க ளின் வீடுகளை இடிக்கவும் அப் பகுதியில் இருந்து அப்புறப் படுத்த இருந்த வேடசந்தூர் வரு வாய்துறை மற்றும் பொதுப் பணித்துறையை கண்டித்தும் அனைத்து குடும்பங்களுக்கும் பட்டா வழங்க வேண்டுமென வலி யுறுத்தியும் வியாழனன்று (மார்ச் 24) அன்று காத்திருக்கும் போராட் டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலை யில், மார்ச் 22 அன்று வேடசந்தூர் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நீர்வழி புறம்போக்கு என்பதால் பட்டா வழங்க முடி யாது எனவும் அதே இடத்தில் அந்த மக்கள் குடியிருக்கலாம் என்றும் மேலும் வீடுகளை இடிக் கவோ, நோட்டீஸ் கொடுப்பதோ இனி வருவாய் துறை, பொதுப் பணி துறை செய்யாது எனவும் மேலும் அந்த மக்கள் விரும்பி னால் ஒரே வீட்டினுள் வாழும் 3 மற்றும் 5 குடும்பங்கள் உள்ள குடும்பங்களுக்கு வேறு இடம் வழங்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர். சச்சி தானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி, மாவட் டக் குழு உறுப்பினர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் ஆராயி, நாகராஜ், முருகபாண்டி மற்றும் வேடசந்தூர் காவல் ஆய் வாளர், வட்டார வளர்ச்சி அலு வலர், பொதுப்பணித் துறை அதி காரிகள், நாகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண் டனர்.