தேனி, மே 27- சென்னையில் மதுரை-தேனி அகல ரயில் பாதை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.அத னைத் தொடர்ந்து வியாழக்கிழமை மதுரையிலிருந்து தேனி ரயில் நிலை யத்திற்கு வந்தடைந்த ரயிலுக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க ,மலர் தூவி பொதுமக்கள் வரவேற்றனர். மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு தொ டங்கியது. இத் திட்டத்தில் தற்போது மதுரை-தேனி இடையே பணிகள் முடிவடைந்து, வியாழனன்று சென் னையில் இத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தேனி ரயில் நிலையத்தில் இந்த காணொலிக் காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆண்டிபட்டி ஆ.மகராஜன், பெரியகுளம் கே.எஸ்.சரவணக்குமார், தேனி நகர்மன்றத் தலைவர் பா.ரேணுப்பிரியா ஆகி யோர் மேடையிலிருந்து காணொலி காட்சியை பார்த்தனர். மாவட்ட ஆட்சி யர் க.வீ.முரளீதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலு வலர் சுப்பிரமணியன், போடி-மதுரை, திண்டுக்கல்-லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்ட அமலாக்கக் குழு தலைவர் ஏ.லாசர், செயலாளர் பி.சி. ராஜேந்திரன், பொருளாளர் கே.எஸ். கே.நடேசன், நிர்வாகிகள் பி.ராம மூர்த்தி,கே.ராஜப்பன், கே.சீனிவா சன்,ஜெயபாரதி, எல்.ஆர்.சங்கரசுப்பு, சி.முனீஸ்வரன், நாகராஜன் ,மாரி முத்து மற்றும் பொதுமக்கள் காணொலி காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர். காணொலி காட்சி நிகழ்ச்சி முடிந்த தும், திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து தேனி மக்களவை உறுப்பினர் பேசினார். மதுரையிலிருந்து இரவு தேனி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த ரயிலை பொதுமக்கள் மலர் தூவி வரவேற்ற னர். போடி-மதுரை, திண்டுக்கல்-லோ யர்கேம்ப் அகல ரயில் பாதை திட்ட அமலாக்கக் குழு சார்பில் தலைமை பொறியாளர் உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.