மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் மதுரை மத்திய சிறை இணைந்து மதுரையில் சிறைவாசிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாமை நடத்தினர். மருத்துவர் மாரீஸ்வரன் தலைமையில் ஆறு சிறப்பு மருத்துவர்கள் உட்பட 17 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறையில் உள்ள சிறைவாசிகளின் உடல் நலத்தை பரிசோதித்து மருத்துவச் சிகிச்சை அளித்தனர். முகாமை மதுரை சரக சிறைத் துறைத் தலைவர் பழனி துவக்கி வைத்தார்.