districts

img

அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி சிபிஎம் சார்பில் தெருமுனைக் கூட்டம்

மதுரை, டிச. 25- வைகை வடகரை - ஆழ்வார்புரம் ஆற் றுப்பால வேலையை விரைவில் முடித்திட வேண்டும். ஓபுளா படித்துறை பாலத்தின் வேலையை துரிதப்படுத்த வேண்டும். மதுரை மாநகரில் உள்ள குண்டும் குழியு மான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் வடக்கு 1 ஆம் பகுதிக்குழு சார்பில்  வெள்ளியன்று தெரு முனை கூட்டம் கிளைச் செயலாளர் எம். நமச்சிவாயம் தலைமையில் ஆழ்வார்புரம் மூங்கில்கடை அருகில் நடைபெற்றது பகுதிக்குழு உறுப்பினர் கே.கார்த்திக் முன்னிலை வகித்தார். மாவட்டச் மா. கணேசன் சிறப்புரையாற்றினார். பகுதிக் குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராதா, டி. குமரவேல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் க.திலகர் ஆகியோர் பேசினர். ஆர்.மாரி நன்றி கூறினார். இதில் பகுதிக்குழு உறுப்பி னர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் உள் பட பலர் கலந்துகொண்டனர்.