சிவகங்கை, ஆக.11- சிவகங்கை மாவட்ட காவல் துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சோழபுரம் புனித ஜஸ்டின் மகளிர் கலைக்கல்லூரியில் சமூக நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட காவல்துறை காவல் கண் காணிப்பாளர் அரவிந்த் தலைமை வகித்தார். சிவ கங்கை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிபிசௌந்தர்யன், புள்ளியியல் ஆய்வாளர் கண்ண தாசன்.மாணவி இனியா ஆகியோர் பேசினர். விழாவில் கவிதைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.