districts

img

பொங்கல் மண்பானை விற்பனை மந்தம் தொழிலாளர்கள் கவலை

நத்தம், ஜன.5-  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகு திக்குட்பட்ட திம்மணநல்லூர் ஊராட்சி  பாறைப்பட்டியில் பொங்கல் மண்பானை கள் தயாரிக்கும் பணி நடந்துவருகிறது.  தற்போது எவர்சில்வர், அலுமினியம், பித்தளைப் பாத்திரங்களே மக்களால் பெரு மளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும்  தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையன்று  மண்பானைகளில் பொங்  கல் வைத்து. சூரியனை வணங்குவது வழக்  கம்.  இதற்காக பல்வேறு அளவுகளில் மண்  பானைகள் தயாரிக்கப்படுகின்றன. இது குறித்து பாறைப்பட்டியில் மண்பானைகள் தயாரிப்பவர்கள் கூறியதாவது: பொங்கல் பண்டிகை சமயத்தில் பயன்  படுத்துவதற்கு ஏற்ப ஒரு லிட்டர் கொள்ள ளவு, 3 லிட்டர், 5 அல்லது 7 லிட்டர் கொள்ள ளவு என வெவ்வேறு கொள்ளளவுகளில் மண்பானைகள் தயாரிக்கப்படுகின்றன. அதற்கு வண்ணங்களும் பூசப்படுகின்றன. அதன் அளவுகளுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.40 முதல் அதிகபட்சம் ரூ.250 வரை விற்  பனை செய்யப்படுகிறது. சுமார் 50 குடும்பத்  தினர் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.  விற்பனை மந்தமானதால் பல்வேறு வேலை களுக்கு சென்று விட்டனர். தற்போது 20 குடும்பத்தினர் மட்டுமே இத்தொழிலை செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் மண்பானை செய்வதற்கு களிமண் இலவச மாக அள்ளிக் கொள்ள அனுமதிக்கப்பட்டி ருந்தது. ஆனால் தற்போது முறையாக அனு மதி பெற்று உரிமைச்சீட்டுடன் களிமண் எடுக்க வேண்டும் என்று  சொல்கின்றனர். அதற்கு கூடுதலாக செலவு செய்ய வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மண்பானை  செய்வது ஒரு கலை. குறிப்பிட்ட எண்ணிக் கையிலான ஒரு செட் பானை செய்வதற்கு  குறைந்தபட்சம் 6 மணி நேரம் தேவை. களிமண், வண்டல் மண் கலவையைக் கலந்து, கசடுகளை அகற்றி, திருவியில்  வைத்துத் திருவி பானை தயாரிக்கப்படும். பின்னர் காய வைத்து, சூளையில் வேக வைத்து மீண்டும் காய வைக்கப்பட்டால் மண்பானை தயார். இதற்காக குறைந்த பட்சம் 2 நாட்களாகும் .வழக்கமாகப் பொங்  கல் பண்டிகை நெருங்க, நெருங்க ஆயி ரக்கணக்கில் மண்பானைகள் விற்றுவிடும். இறுதிக்கட்டத்தில் விற்பனை தீவிரமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை சமயத்தில், வழக்கமாகச் சிறிய பானைகள் ஏறத்தாழ 500 முதல் ஆயிரம்  எண்ணிக்கையிலும், பெரிய பானைகள்  ஆயிரம் முதல் 2 ஆயிரம் எண்ணிக்கையி லும் விற்றுவிடும். ஆனால், நடப்பாண்டுப் பானைகள் தயாரிப்பு தீவிரமாக இருந்தா லும், எதிர்பார்த்த அளவுக்கு  விற்பனை ஆகவில்லை. இத்தொழிலை மட்டுமே நம்பி யுள்ள தொழிலாளர்களுக்குப் பெரிய இழப்பாகிறது. அதேசமயம், பண்டிகைக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் இறுதிக் கட்டத்தில் விற்பனை தீவிரமடையும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.