சிவகாசி, டிச.16- சிவகாசி பேருந்து நிலையத் திலிருந்து இரவு நேரம் முதல் அதிகாலை வரை திருவில்லி புத்தூர் மற்றும் சாத்தூர் செல்ல பேருந்து வசதிகள் இல்லை. இத னால், பலர் பேருந்து நிலையங்களி லேயே குடும்பங்களுடன் கடும் குளி ரிலும், அச்ச உணர்வுடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இரவு நேரங்களில் சிவகாசி-திருவில்லிபுத்தூர், சாத்தூர் ஆகிய ஊர்களுக்கு பேருந்து சேவையை தொடங்க வேண்டும். மேலும், சிவகாசியிலிருந்து மதுரைக்கு செல்ல நள்ளிரவு நேர பேருந்துகளை அதிகப்படுத்திட வேண்டும். கொரோனாவை கார ணம் காட்டி நிறுத்தப்பட்ட கிராமப் புற பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். ஏற்கனவே, அனுமதி வழங் கப்பட்ட வழித்தடங்களில் பேருந்து கள் இயக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைக ளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கையெ ழுத்து இயக்கம் நடைபெஙற்றது. சுக்கிரவார்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக் கத்திற்கு கிளை செயலாளர் பிர காஷ் தலைமையேற்றார். ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். திருத்தங்கல் பகுதியில் கிளை செயலாளர் மாரிச் சாமி தலைமையில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.என்.தேவா துவக்கி வைத்தார், இதில் ஏரளமானோர் பங்கேற்றனர்.