சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வு நிலை பேரூராட்சியில் ரூ.1.9 கோடி மதிப்பீட்டில் செட்டியூரணி புனரமைக்கும் பணியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் என்.அம்பலமுத்து, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வி.ந.அருணகிரி, துணைத்தலைவர் பி.பிரவின்குமார், பேரூராட்சி உதவி இயக்குநர் இரா.ராஜா, செயல் அலுவலர் அ.மு.ஜான்முகம்மது உட்பட பலர் கலந்து கொண்டனர்.