சிவகங்கை, அக்.5- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செய்களத்தூர் சமத்துவபுரத்தில் சமூகநலத்துறை சார்பில் 100 கர்ப்பிணி களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, திமுக ஒன்றிய செயலாளர் ராஜாமணி, ஊராட்சி மன்ற தலைவி ஜானகிசுப்பிரமணியன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.