districts

img

மின் ஊழியர் மத்திய அமைப்பு சிவகங்கை மாவட்ட மாநாடு

சிவகங்கை, மே 29- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சிவகங்கை மாவட்ட மாநாடு மானா மதுரையில் நடைபெற்றது. ஒய்வுபெற்ற நல அமைப்பு மாவட்ட செயலாளர் விநாயக மூர்த்தி கொடியேற்றி பேசினார். வரவேற்புக் குழு செயலாளர் கணேசன் வரவேற்று பேசி னார். மாநில துணைத் தலைவர் குருவேல் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் வண்ணமுத்து சிறப்புரை யாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் சேதுராமன், ஆட்டோ சங்க மாவட்ட செயலா ளர் விஜயகுமார், வரவேற்புக் குழுத் தலை வர் ராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாநாட்டில் மாவட்ட தலைவராக உமாநாத், மாவட்ட செயலாளராக கருணாநிதி, மாவட்ட பொருளாளராக மோகனசுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  ஒப்பந்த அடிப்படையில் பணி புரியக் கூடிய தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் .வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தினந்தோறும் கூலி 380 வழங்க வேண்டும். அலுவலகங்களில் பணியாற்றும் பகுதிநேர தொழிலாளர்களை முழு நேர பணியாளராக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். திருப்பாச்சேத்தி, பூவந்தி ஆகிய மின்வாரிய அலுவலகங்களை புதிதாக கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.