districts

img

சிவகங்கை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு- கண்காணிப்பு குழுக்கூட்டம்

சிவகங்கை, மார்ச்11- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மார்ச் 11 அன்று  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, முன்னிலையில், கண்காணிப்புக்குழு தலைவரும், சிவகங்கை நாடாளு மன்ற உறுப்பினருமான கார்த்திக் ப சிதம்பரம் தலை மையில் நடைபெற்றது.     அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற ஒன்றிய அரசின் சம்பந்  தப்பட்ட துறை செயலாளர்களை பரிந்துரை செய்து,  தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத் தரு வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத் துத்துறை அலுவலர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான  கார்த்திக் ப. சிதம்பரம் தெரிவித்தார். இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுபபினர்கள்; ஆ.தமி ழரசி ரவிக்குமார் (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.இரா.சிவராமன், ஊரக  வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர்  வெண்ணிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி  திட்ட அலுவலர் சேகர்,காஞ்சிரங்கால் ஊராட்சித்தலை வர் மணிமுத்து, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலை வர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அனைத் துத்துறை முதல்நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.