சிவகங்கை, ஏப்.3- சிவகங்கை மாவட்ட ஆட்சி யர் அலுவலகக் கூட்டரங்கில் ஏப்ரல் 3 அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 367 மனுக்கள் பெறப்பட்டன. அம் மனுக்களில் தகுதியுடைய மனுக் கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர் களுக்கு மாவட்ட ஆட்சித்தலை வர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், வருவாய்த் துறையின் சார்பில் சமூகப்பாது காப்புத் திட்டத்தின் கீழ் 10 பய னாளிகளுக்கு பல்வேறு வகை யான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித் தொகைக்கான ஆணைகளை யும், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 ஆயிரம் மதிப்பீட்டிலான தையல் இயந்திரங்களையும், 2021-2022-ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக் கத்தின் சார்பில் மணிமேலை விருது வழங்கிட தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள 09 சமுதாய அமைப்புனர்களுக்கு மொத்தம் ரூ.4 லட்சத்திற்கான ரொக் கத்தொகை மற்றும் சான்றிதழ் என மொத்தம் 34 பயனாளி களுக்கு ரூ.4.90 லட்சம் மதிப் பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன் களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணி வண்ணன், உதவி ஆணையர் (கலால்).ச.ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) பி.சாந்தி உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.