districts

img

மேலூரில் சீத்தாராம் யெச்சூரி பிரச்சாரம்

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனுக்கு வாக்கு சேகரித்து, மேலூர் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரையாற்றினார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல் ராஜ், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ். பாலா, கே.ஜி. பாஸ்கரன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் என். பழனிச்சாமி, திமுக தொகுதிப் பொறுப்பாளர் வ.து.ந. ஆனந்த், திமுக மேலூர் நகர்மன்றத் தலைவர் யு. முகம்மது யாசின், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் ஆலாத்தூர் இரவிச்சந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் எம். மார்நாடு, சிபிஐ மாவட்டச் செயலாளர் பி. முத்துவேல், விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் அரச. முத்துபாண்டியன், மநீம மாவட்டச் செயலாளர் வி. சிவாஜி, தி.க. மாவட்டத் தலைவர் லெ. வீரமணி, மூமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் வி. திருவீரணக்குமார், மமக வடக்கு மாவட்டத் தலைவர் எம்.ஏ. சீனி அகமது, மஜக புறநகர் மாவட்டச் செயலாளர் என். முபாரக் அலி, ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்டச் செயலாளர் பா. தமிழ்க்குமரன், ஆதித்தமிழர் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் துரைப்பாண்டி, தமிழ்ப்புலிகள் வடக்கு மாவட்டச் செயலாளர் உ. நீதிவேந்தன், பார்வர்டு பிளாக் மாவட்டச் செயலாளர் பி.என். அம்மாசி, விவசாயத் தொழிலாளர் கட்சி மாவட்டத் தலைவர் சமயசெல்வம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செ. முத்துராணி, த. செல்லக்கண்ணு, எஸ்.பி. இளங்கோவன், மேலூர் தாலுகா செயலாளர் எம். கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பி. மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.