விருதுநகர், மார்ச் 9- விருதுநகர் அருகே உள்ளது சின்ன தாதம்பட்டி கிராமம். இங்குள்ள எல்லையம் மன் கோவிலை அப்பகுதியினர் பல ஆண்டு களாக வணங்கி வருகின்றனர். கோவிலை சுற்றி இடங்களும் உள்ளன. இந்நிலையில், கோவில் நிலத்தை உட்பிரிவு செய்து கடந்த 1994 ல் தனி நபர் ஒருவர் பெயரில் பட்டா போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வழங்கப்பட்ட பட்டா வை உடனே ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே, மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், அந்த நிலத்தை மற்றொ ருவருக்கு கிரையம் செய்ததாக கூறப்படு கிறது. இதனால், ஆவேசமடைந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புதன்கிழமை காலை முற்றுகையிடடனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கிராம மக்களை தடுத்து நிறுத்தி னர். பின்பு, உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க ஏற்பாடுகளைச் செய்தனர்.