districts

img

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

புதுதில்லி, டிச.22- சத்ரபதி சிவாஜியின் பெய ரைச் சொல்லி வாக்கு சேகரிக் கும் பாஜக, அந்தக் கட்சி ஆளும் கர்நாடகத்தில் சிவாஜி சிலை கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து வாய் திறக்காதது ஏன்?  என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. கர்நாடக மாநிலத்தில், அண்மையில் சத்ரபதி சிவாஜி, சுதந்திரப் போராட்ட வீரா் சங் கொலி ராயண்ணா ஆகியோ ரின் சிலைகள் சேதப்படுத்தப் பட்ட பின்னணியில், சிவசேனா இந்த கேள்வியை எழுப்பியுள் ளது. இதுதொடர்பாக சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியிருப்பதாவது: கர்நாடகத்தில் சத்ரபதி சிவாஜி சிலை உடைப்பு விவ காரத்தில் ஒன்றிய அரசு இரட்டை வேடம்போட்டு வரு கிறது.

அண்மையில் வாரணா சிக்குச் சென்ற பிரதமர் நரேந் திர மோடி, வாக்காளர்களைக் கவரும் வகையில் முகலா யர்களை எதிர்த்துப் போரிட்ட சத்ரபதி சிவாஜி குறித்து பெரு மிதத்துடன் குறிப்பிட்டார். ஆனால், கர்நாடகத்தின் பெங் களூருவில் சிவாஜி சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் ஒருவா்கூட எந்தக் கருத்தையும் தெரி விக்கவில்லை. எம்இஎஸ் அமைப்பு ஓர் அரசியல் அமைப்பு அல்ல; ஆனால், பெல்காம் பகுதியில்  உள்ள மராத்தி பேசும் மக்களின் பிரச்சனைகளுக்காகப் போரா டுவதில் கடந்த 70 ஆண்டு களாக அவர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

மகா ராஷ்டிரம்-கா்நாடக எல்லைப் பகுதியில் உள்ள மராத்தி மொழி பேசும் மக்களுக்காக அவர்கள் தியாகம் செய்துள்ள துடன் ரத்தமும் சிந்தியுள்ளனர். ஆனால், கர்நாடக அரசு, எம்இஎஸ் அமைப்பின் தொண்டர்கள் மீது தடியடி நடத்தியதுடன், 200-க்கும் மேற்பட்டவர்களை சட்ட விரோ தமாக கைது செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜகவைச் சேர்ந்த உணர் வுள்ள தலைவர்கள் யாரும் எந்தக் கருத்தும் தெரிவிக்கா தது ஏன்?  எம்.இஎஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் பேசுகின்றனர். பாஜக அரசுக்கு துணிவிருந் தால் அந்த அமைப்பை தடை செய்யட்டும்.  இவ்வாறு சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.