கடமலைக்குண்டு, ஜூலை 23- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே சிறப்பாறை கிராமத்தில் 81 ஏக்கர் நிலப்பரப்பளவில் சாந்தநேரி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மா யில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கண்மாயின் பெரும்பாலான ஏக்கர் நிலப்பரப்பை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு போக மீதமுள்ள பகுதியில் செடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் கண்மாயில் நீர் தேக்கி வைக்க முடியவில்லை. கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மயிலாடும்பாறை பகுதி விவ சாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், சாந்தநேரி கண்மாயில் ஆக்கிரமிப்புகளை முழுமை யாக அகற்றி அதில் நீர் தேக்கி வைக்கும் பட்சத்தில் மூலக்கடை, முத்தாலம்பாறை, சிறப்பறை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் கோடை காலங்களில் கிராமங்க ளில் ஏற்பட்டு வரும் குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும். ஆனால் கண்மாய் ஆக்கிரமிப்பு காரணமாக சிறப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்க ளில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக் கள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர். இருப்பினும் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒன்றிய அதி காரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். அவ்வப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவ தாக கூறி வருவாய்த்துறையினர் மூலம் ஒன்றிய அதிகாரிகள் கண்மாயை அளவீடு செய்து செல்கின்ற னர். ஆனால் காரணம் ஏதும் தெரிவிக்காமல் பணி களை அப்படியே கிடப்பில் போட்டு விடுகின்றனர். இந்த நிலை நீடித்தால் அடுத்த சில வருடங்களில் கண்மாயில் மொத்த நிலப்பரப்பும் ஆக்கிரமிப்பு செய்யப்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப் பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாந்தநேரி கண்மாயில் ஆக்கிரமிப்புகளை முழுமை யாக அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.