மதுரை, ஜன. 21- மதுரை முனிச்சாலை பகுதி யில் செயல்பட்டு வரும் ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப்பள்ளி யில் ஜனவரி 13ஆம் தேதி மாண வர்களை சிறப்பு வகுப்பு என்ற பெயரில் வரச்சொல்லி பள்ளி நிர்வாகம் வேலை வாங்கி யுள்ளது. இதில் இரண்டாம் மாடி யில் இருந்து மர மேசைகளை தளத்திற்கு கொண்டு வரச் சொல்லி மாணவர்களை பள்ளி நிர்வாகம் வேலை வாங்கி யுள்ளது இந்த நிலையில் இரண்டாவது மாடியிலிருந்து மரம் மேசைகளை தூக்கி வந்த 10 ஆம் வகுப்பு மாணவன் சந்தோஷ் மரமேசையினை தூக்கி வந்தபோது மயக்க மடைந்து பேச்சு மூச்சற்று கீழே விழுந்துள்ளார். அதன்பின்பு அந்த மாணவருக்கு பள்ளி நிர்வா கம் எந்த முதலுதவியும் செய்யா மல் அங்கேயே படுக்க வைத்து உள்ளது. இந்த சம்பவம் 10:05 மணிக்கு நடைபெற்ற நிலையில் மாணவரின் பெற்றோருக்கு 10. 45 மணிக்கு தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. அதனை தொ டர்ந்து பெற்றோர், மாணவரை வந்து பார்க்கையில் பேச்சு மூச்சற்று படுக்கவைத்து உள்ளதை கண்டு அதிர்ச்சி யடைந்து மருத்துவமனைக்கு மாணவரை கொண்டு சென்றுள் ளனர். மாணவனை பரிசோதனை செய்யத மருத்துவர், இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பின்பு மாணவன் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது காவல்துறை மூலம் சரியான விசாரணை இல்லை என்ற அடிப்படையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வெள்ளி யன்று மாணவரின் தந்தையுடன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்களிடம் பள்ளியில் வேலை வாங்குவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் பள்ளி நிர்வாகமும் எப்போதும் போ லத்தான் வேலை வாங்கினோம் என்று கூறுகிறார்கள். இது மிகப்பெரிய மோசமான நடவ டிக்கையாகும். எனவே பள்ளிக ளில் மாணவர்களை வேலை வாங்கக் கூடாது என்பதை மதுரை யில் உள்ள அனைத்து பள்ளிக ளுக்கும் மாவட்ட நிர்வாகம் சுற்ற றிக்கை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் மாணவர்க ளிடம் வேலை வாங்கும் நட வடிக்கையில் ஈடுபடும் பள்ளி கள் மீது கடுமையான நடவ டிக்கை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். இறந்த மாண வன் சந்தோஷ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் ஏ.பி.டி. துரைராஜ் பள்ளி யின் மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாணவர் சங்க மாணவர் சங்க மாவட்டத் தலைவர் க. பாலமுரு கன், செயலாளர் எஸ். வேல் தேவா மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகள் மாணவன் சந்தோஷ் தந்தை ஆகியோர் மனு அளித்துள்ளனர்.