districts

img

மீனவப் பெண் கும்பலால் பாலியல் வன்கொலை

இராமேஸ்வரம், மே 25-  இராமேஸ்வரத்தில் பாசி எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த  மீனவ பெண் கும்பலால் பாலியல்  பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டார்.  இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் வடகாடு கிராமத்தை சேர்ந்த பாலு என்பவரின் மனைவி  சந்திரா(45). இவர் கடல் பாசி எடுக் கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.  அதே பகுதியில் தனியாருக்கு சொந்  தமான இறால் பண்ணை உள்ளது. இதில், ஓடிசாவை சேர்ந்த விகாஷ் (24)ராகேஷ்(25)பிரசாத்(18)பிண்டு (18)ரஞ்சன் ராணா(34)பிரகாஷ்(22) ஆகிய 6 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், சந்திரா செவ்  வாய்க்கிழமை காலையில் வழக் கம் போல பாசி எடுக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் நகர் காவல்  நிலையத்தில் புகார் தெரிவித்துள்ள னர்.  இந்நிலையில் இறால் பண்ணை காட்டு கருவேல மரத்திற்கு அருகே நிர்வாணமாக உடல் எரிந்த நிலை யில் கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இறால் பண் ணையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற 6 பேரையும் பொதுமக்கள் கோபத்தில் தாக்கினர். இவர்களை காவல்துறையினர் மீட்டனர். பின்  னர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சம்மந்தபட்ட வர்கள் மிது கடும் நடவடிக்கை எடுக்  கப்படும். மேலும் காயமடைந்துள்ள 6 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை  அளிக்க வேண்டும் என தெரிவித்த னர். ஆனால் பொதுமக்கள் அனு மதிக்காததால் அதிகாலை வரை இந்த பிரச்சனை நீடித்தது. பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

இதனைத்தொடர்ந்து மே 25 புதன்கிழமை காலையில் 9 மணி யளவில் இராமேஸ்வரம் தீவுப்பகுதி யில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். மீனவ பெண்ணை பாலி யல் வன்கொலை செய்தவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம்- மதுரை தேசிய நெடுஞ்  சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கருணா கரன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஆரோக்கிய மேரி, ஜஸ்டின் மற்றும் ராமச்சந்திரபாபு, மணி கண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உறுதி

இதனைதொடர்ந்து, இராமநாத புரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன்,ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், வரு வாய் கோட்டாட்சியர் சேக் மஞ்சூர், வட்டாட்சியர் மார்ட்டின், அப்துல்  ஜப்பார் மற்றும் கிராமத்தலை வர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சட்டப்பேரவை உறுப்பினர் தனது சொந்த நிதியில் இருந்து 2 லட்சம் இழப்பீடாக வழங்  கினர்.  மேலும் இச்சம்பவம் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய சட்ட நட வடிக்கை எடுக்கப்படும். கொல் லப்பட்டுள்ள சந்திராவின் மகள்  பிளஸ் 2 படிப்பு செலவை தான் ஏற்ப தாகவும். அரசு சார்பில் மேற் கொள்ள வேண்டிய பணிகளை விரைந்து மேற்கொண்டு உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என காதர்  பாட்ஷா முத்துராமலிங்கம் தெரி வித்தார்.  மேலும் காவல்துறையினர் தற்  போது 6 பேரை கைது செய்துள்ள னர். மேலும் இறால் பண்ணை காவ லாளி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினர் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. இதனைய டுத்து போராட்டத்தை கைவிட்டனர்.