தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி தலைமையில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குடும்ப வன்முறை சட்டம், இளம் வயது கருத்தரித்தல், பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மே 21 அன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீ சேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.