திருவில்லிபுத்தூர், ஏப்.12- திருவில்லிபுத்தூர் பெருமாச்சேரி தெருவில் கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிப்புத்தூர் பெரு மாச்சேரி தெருவில் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய் கள் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் தேங்கிக்கிடக்கி றது. கால்வாயின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் வடியாமல் குடி யிருப்புகளை சுற்றி தேங்கி சுகாதாரச் சீர்கேடு நிலவு கிறது. அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம், சிறுவர் பூங்கா மற்றும் கோயில் அருகே கழிவு நீர் தேங்கி உள்ள தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனனே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என்று நகராட்சி மற்றும் திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.