தேனி, ஏப்.21- ஆண்டிபட்டி அருகே மேக்கி ழார்பட்டி கிராமத்தில் நிலவும் கடும் குடிநீர் பற்றாக்குறையால் பொது மக்கள், கால்நடைகள் பெரும் அவ திப்பட்டு வருகின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியம் அனுப்பப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேக்கிழார்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிரா மத்தில் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது. அங்கு மின் இணைப்பு இல் லாததால் தனியார் வீட்டில் மின்சா ரம் எடுக்கப்பட்டு தண்ணீர் விநியோ கம் செய்யப்படுகிறது. ஊராட்சி சார் பில் மின் இணைப்பு கேட்டு பணம் செலுத்தப்பட்ட நிலையில் மின் இணைப்பு கொடுக்க மின் வாரியம் காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த சில மாதமாக கடும் குடி நீர் பற்றாக்குறை நிலவுகிறது. தின மும் 15 குடங்கள் மட்டுமே நீர் கிடைக்கிறது. இதனால் குடங்களு டன் காத்திருக்கும் நிலை ஏற்படு கிறது. குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தனியார் தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாத நிலையில் அரு கில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேக்கிழார்பட்டி கிராமத்திற்கு தடையின்றி குடிநீர் கிடைத்திட, உட னடியாக மின் இணைப்பு வழங்க மின்சார வாரியத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளர் எஸ்.மீனாட்சிசுந்தரம் கேட்டுக் கொண்டுள்ளார்.