districts

மதுரை முக்கிய செய்திகள்

தேங்காய் ஒரு கிலோவுக்கு விலை ரூ.45  நிர்ணயம் செய்திடுக!  தென்னை விவசாயிகள் கோரிக்கை

அருமனை, அக்.12 கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறத்தில் தமிழ்நாடு தென்னை  விவசாயிகள் சங்க மேல்புறம் வட்டார அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விஜேந்திரன் தலைமை தாங்கினார் .கிறிஸ்துதாஸ் முன்னிலை வைத்தார். கூட்டத்தை துவக்கி வைத்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க குமரி மாவட்டச் செயலாளர் டி.விசென்ட் உரையாற்றினார். தேங்காய் ஒரு கிலோவுக்கு குறைந்தபட்ச விலை ரூ.45 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். தென்னை மரங்க ளில் ஏற்படுகின்ற கொடிய நோய்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மற்றும் நோயை தடுப்பதற்கான ஏற்பாட்டினை அரசு செய்ய வேண்டும். 60 வயது நிரம்பிய தென்னை விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்க வேண்டும். தென்னை மரம் ஏறும் விவசாயிகளுக்கு பயிற்சியளித்து இயந்திரங்கள் வழங்கிட வேண்டும். உட்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தலைவராக விஜேந்திரன், துணைத்தலைவராக ரங்க சாமி, செயலாளராக ஹென்றி, இணைச் செயலாளராக கோபி, பொருளாளராக வினோத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்,

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு:  மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் 

திருநெல்வேலி ,அக் .12- ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அவரவர் படித்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவ-மாணவி கள் விடைத்தாள்களின் ஒளிநகல் பெற, விடைதாள்களை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர்www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து  அதனை பூர்த்தி செய்து  அந்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டண தொகையை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். புதன்கிழமை காலை 11 மணி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். அதற்குப் பிறகு அனுப் பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விடைத் தாள் ஒளி நகல் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.275-உம், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்ப வர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.205-உம் செலுத்த வேண்டும். இந்த தகவலை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரம், சுற்றுச்சூழலை பாதுகாக்க கூட்டு திடக்கழிவு திட்டத்தை கைவிடுக! திருநந்திக்கரையில் சிபிஎம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக்.12- குமரி மாவட்டம் திற்பரப்பு பேரூ ராட்சிக்குட்பட்ட திருநந்திக்கரை அருகே திற்பரப்பு, குலசேகரம், திருவட்டார், ஆற்றூர் ஆகிய 4 பேரூராட்சிகளில் கூட்டு திடக்கழிவு  மேலாண்மைத் திட்டம் அமைக்க  மாவட்ட நிர்வாகம் அனுமதிய ளித்துள்ளதற்கு எதிராகவும், சுகா தாரம், சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் நடத்தவிருந்த மறியல் போராட்டம் அதிகாரிகள் அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து பெரும்திரள் ஆர்ப்பாட் டமாக நடைபெற்றது.   திற்பரப்பு பேரூராட்சி, திருநந்திக் கரை வேட்டி, முடுக்கிட்டாங்கடவில், திற்பரப்பு பேரூராட்சிக்கு உடபட்ட பகுதியில் உள்ள திடக்கழிவுகள் மேலாண்மை செய்ய 2018 இல் சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. திடக்கழிவு மேலாண்மை சட்டத்தின்படி, திற்பரப்பு பேரூராட்சியில் தற்போ துள்ள 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு மட்டுமே போதுமான நிலப்பரப்பாகும் இது. இந்நிலையில் குலசேகரம், திருவட்டார், ஆற்றூர் பேரூராட்சிகளின் கழிவுகளையும் இந்த இடத்தில் கொட்டும் திட்டத்தி ற்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே இடத்தில் ஒன்றுக்கு மேற் பட்ட பேரூராட்சியின் கழிவுகளை கொட்டுவது பெரும் சுகாதார பிரச்ச னைகளை உருவாக்கும். பெரிய திட்டங்களை தவிர்த்து சிறு சிறு திட்டங்களாக செயல்படுத்துவதே அறிவியல் பூர்வமாக சரியாக இருக்கும். ஆகவே மாவட்ட நிர்வா கம் பிற பேரூராட்சிகளின் குப்பை களை இங்கு கொட்டும் திட்டத்தை  வைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வரு கிறது. இத்திட்டம் நிறைவேற்றப் பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஓராண்டுக்கு முன்பே தீக்கதிர் விரிவான செய்திக்கட்டுரை வெளியிட்டது. இந்நிலையில் அக்டோபர் 11 செவ்வாயன்று திருநந்திக்கரை பாலம் அருகே மறியல் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  முடிவு செய்தது. அதன்படி நூற்றுக்க ணக்கான பொதுமக்கள் குவிந்த னர். திற்பரப்பு பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.சி.ஸ்டாலின் தாஸ் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், திருநந்திக்கரை கூட்டுறவு வங்கி தலைவர் சுரேஷ்குமார், பேரூராட்சி  வார்டு உறுப்பினர்கள், சிபிஎம் வட்டார செயலாளர் பி.விஸ்வாம்ப ரன் உள்ளிட்டோர் கோரிக்கையை விளக்கி பேசினர். காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கூட்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதாக உறுதிய ளிக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் மீண்டும் திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி எழுத்துப்பூர்வமாக உறுதி யளிக்கப்பட்டது.

9-ஆம் வகுப்பு மாணவிக்கு  பிளஸ்-1 மாணவர் தாலி கட்ட முயற்சி

திருநெல்வேலி,அக்.12- நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பயின்றுவரும் பிளஸ்-1 மாணவர், மற்றொரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். தன்னை அவர் காதலிக்குமாறு கூறியும், மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.  இந்நிலையில், திங்கள் அன்று மாலையில் அந்த மாணவி பள்ளிக்கூடம் முடிந்ததும் வெளியே வந்து கொண்டிருந்தார்?  அப்போது அங்கு வந்த பிளஸ்-1 மாணவர் திடீரென்று மாணவிக்கு தாலிகட்ட முயன்றார். இதனால் ்அதிர்ந்து போன மாணவி கூச்சலிட்டவாறு ஓடினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதனால் பயந்து போன அந்த மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி காவல் நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில், மாணவி கூச்சலிட்டபடி ஓடுவதும், மாணவர் தப்பி ஓடுவதும் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட மாணவர் டிற்றும் அவரது பெற்றோரை காவல் நிலையத்துக்குவர வழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.  கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் பிளஸ்-2 மாணவிக்கு பாலிடெக்னிக் கல்லூரி மாண வர் தாலிகட்டிய சம்பவம் சமூக வலைதளத்தில்  வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், சேரன்மாதேவியில் மாணவி ஒருவருக்கு பிளஸ்-1மாணவர் தாலி கட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இணையதள மோசடி:109 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

நெல்லை  எஸ்.பி.பேட்டி

திருநெல்வேலி,அக்.12- நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் சைபர் மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்வது உள்ளிட்டவை கள் தொடர்பான விழிப்பு ணர்வு ஓவியங்கள் அடங்கிய  கண்காட்சியை மாவட்ட எஸ். பி.சரவணன் புதன்கிழமை திறந்து வைத்து பார்வை யிட்டார்.  அதனை தொடர்ந்து செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 101 செல்போன்கள் கண்ட றியப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு செல்போன் தொலைத்தவர்களிடம் ஒப்ப டைத்தார்.  பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-  இந்த ஆண்டு ரூ.14 லட்சம் மதிப்பிலான 486 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக் கப்பட்டது. நெல்லை மாவட் டத்தில் நீண்டகால ரவுடி கள், அதிக வழக்கு உள் ்ளோர் என ‘ஏ பிளஸ், பிளஸ்’ அந்தஸ்தில் உள்ளவர்கள் என 450 பேர் கொண்ட பட்டி யல் தயார் செய்யப்பட்டு அனைவரும் தீவிர கண்கா ணிப்பில் உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 177 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 9 மாதங்களில் அதிகமானோர் கைது செய் யப்பட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் நன்னடத்தை பிணையை மீறியதாக இது வரை கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.  தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை செய்த 60-க்கும் மேற்பட்டோ ரின் வங்கி கணக்குகள் முடக் கம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக நெல்லை மாவட் டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, கஞ்சா உள்ளிட்டவைகளின் புழக்கம் பெரும்பாலான அளவு குறைந்துள்ளது. இணையதளம் மோசடியில் ஈடுபட்ட 109 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு ரூ. 92 லட்சத்து 99 ஆயிரத்து 177 இழந்தவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

சாலை அமைப்புப் பணி துவங்கியது இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

குழித்துறை, அக் 12- முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் குளப்புறம் ஊராட்சிக்குட்பட்ட விராலி விளை−கல்லுவெட்டான்குழி− மேலே தோட்டம் சாலையை மேம்படுத்த 2022−2023 ஒன்றிய பொதுநிதியி ல் ரூ 6 லட்சம் ஒன்றிய கவுன்சிலர் ரெஜியால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 30/7/2022 அன்று தரமற்ற முறையில் துறைசார்ந்த அலுவலர்கள் எவரும் இல்லாமல் பணி நடைபெற்றுள்ளது இதற்கு பொதுமக்கள் ஆட்சேபம் தெரி வித்த நிலையில் அதிகாரிகள்  வேண்டு மென்றே வேலைசெய்யாமல் ஒப்பந்தக்கா ரரால் பணிநிறுத்தப்பட்டு சாலை முழு வதும் கட்டுமான பணிகளுக்கு  தடை ஏற்பட்டு இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்தது. இதனால்  சாலைப்பணி தரமாக செய்து முடிக்கப்படாததால் மக்கள் நடமாட முடியாதவாறு சாலையில்  கட்டுமானப் பொருட்களை ஒருமாத காலமாக  குவிந்து கிடக்கின்றது. இதனை அகற்றிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு மனு அனுப்பியும் பயனில்லை.இந்நிலையில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்.13ஆம்தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்  ஆர்ப்பாட்டம் நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் புதனன்று  காலை ஒன்றிய பொறியாளர் மற்றும் சாலை ஆய்வாளர் முன்னிலையில் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. எனவே வியாழ னன்று  அறிவிக்கப்பட்ட போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வட்டாரச் செய லாளர் ரெஜி தெரிவித்துள்ளார்.