விருதுநகர், செப்.2- பிரதமர் மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல், டீசல், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஆகிய வற்றின் விலையை குறைத்திட வேண்டும். புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி செப்டம்பர் 7 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழு வதும் மறியல் போராட்டம் நடை பெறுகிறது. போராட்டத்தை விளக்கி விருது நகர் வடக்கு ஒன்றியம் சார்பில் சூலக்கரை முதல் எம்.செவல்பட்டி வரை நடைபெற்ற பிரச்சாரத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்து வேலு தலைமையேற்றார். மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பி ரமணியன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.வேலுச்சாமி, எஸ்.லட்சுமி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சாராள் ஆகியோர் விளக்கிப் பேசினர். இதில், ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் கே.ராஜேந் திரன், ரெங்கநாதன், முத்துமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவில்லிபுத்தூர்
வத்திராயிருப்பு தாலுகா குன்னூரில் துவங்கி மகாராஜ புரம் வரையிலும் சேதுநாராயண புரத்தில் துவங்கி கூமாபட்டி வரை யிலும் 34 மையங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மா.சுந்தரபாண்டியன், வத்திராயிருப்பு தாலுகா செயலா ளர் பெனரி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூரில் நடை பெற்ற இயக்கத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூ னன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் வி.காசிநாத துரை உட்பட பலர் பங்கேற்றனர். திருவாடானையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்து ராமு, முதுகுளத்தூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.கலை யரசன், கமுதியில் தாலுகா செய லாளர் கண்ணதாசன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.முத்து விஜ யன், கடலாடி கிழக்கு சிக்கல் மையத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.மயில்வாகனன், கட லாடி மேற்கு சாயல்குடி மையத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.கண்ணகி, கீழக்கரையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதுகுளத்தூரில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு தாலுகா செயலா ளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கணே சன் முன்னிலை வகித்தார். மாவட் டச் செயற்குழு உறுப்பினர் கலை யரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.