மதுரை, ஜூன் 2- மதுரை கோட்ஸ் முன் னாள் தொழிலாளி யும், மதுரை கோட்ஸ் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத் தின் முன்னாள் நிர் வாகக்குழு உறுப்பினரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான சிவப்புத்துண்டு, மீசை கந்தன் (எ)கந்தசாமி அவர்கள் கால மானார். 1975 அவசரநிலை காலத்தின் போது மக்களுக்கு வழங்க வேண்டிய ரேசன் அரிசியை பதுக்கிய போது காவல் துறையின் உதவியுடன் அரிசி மூடைகளை மீட்டு மக்களுக்கு வழங்கி யதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக் கத்திற்கு மகத்தான பங்குள்ளது. இதில் தோழர் முரட்டன் பத்திரி தங்கப்பாண்டி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுடன் இணைந்து செயல்பட்டவர் தோழர் மீசை கந்தன். மதுரை கோட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது போராட்டத்தை ஒடுக்க சில சமூகவிரோதிகள் முற் பட்ட போது முரட்டன்பத்திரி தோழர் வீராச்சாமி மற்றும் மதுரை காஸ்ட்ரோ படிப்பகத் தோழர்களுடன் இணைந்து சமூகவிரோதிகளை விரட்டி போராட் டத்திற்கு பாதுகாப்பு அரணாக இருந்த வர் தோழர் மீசை கந்தன். மேலப்பொன்னகரம் முரட்டன்பத்ரி பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய தோழர் மீசை கந் தன் (எ) கந்தசாமி (வயது 74) புத னன்று மாலை காலமானார். அவரது மறைவு செய்தியறிந்து கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன், , மதுரை மாந கர துணை மேயர் டி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம் மாள், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜா.நரசிம்மன், இரா.லெனின், அ.கோவிந்தராஜன், வை.ஸ்டாலின், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் இரா.தெய்வராஜ், மதுரை மாநகர் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழி லாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் இ.உதயநாதன், பொதுச்செயலா ளர் எஸ்.செந்தாமரைக்கண்ணன் மற்றும் பலர் அவரது உடலுக்கு மல ரஞ்சலி செலுத்தினர். மறைந்த மீசை கந்தன் (எ) கந்த சாமிக்கு. பாக்கியம் என்ற மனைவியும், க. ஹோசிமின், க. காஸ்ட்ரோ ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். க.ஹோசிமின் கட்சி உறுப்பினராகவும், சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவராகவும் உள்ளார். அன்னரது இறுதி நிகழ்ச்சி வியா ழனன்று மாலை தத்தனேரி மயனாத்தில் நடைபெற்றது.