குலசேகரம், மே 19- நாகர்கோவிலில் இருந்து சுருளோடு, பொன்மனை வழியாக கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவதாக மாவட்ட தனிப்படை பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெருவள்ளி கடவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்தது. காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். உடனே ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். காரு டன் 2000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.