மதுரை, ஆக.3- மதுரை மாவட்டம் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்க லாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் இளம் சாதனையா ளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உத வித் தொகை திட்டத்தில் (PM - YASASVI) தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் விண்ணப்பித்து, எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை பெற்று பயன்பெறலாம். 2023 – 2024-ஆம் நிதியாண்டில், நாடு முழு வதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொரு ளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மர பின பழங்குடியினர் (OBC, EBC &DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறி விக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சார்ந்த 3,093 மாணவ/மாணவியர்களுக்கு இக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள் ளது. இத்திட்டத்தின் கீழ் கல்வி உத வித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண் ணப்பதாரர்களின் (மாணவ/மாணவி யர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாவல ரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக் குள் இருத்தல் வேண்டும்.
https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டிய லிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர் களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை யிலும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாண வர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். தேசியத் தேர்வு முகமை நடத்தும் YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்விற்கு 10.08.2023-க்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 12.08.2023 முதல் 16.08.2023 தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு (OMR Based) 29.09.2023-ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற் றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங் களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதி வாய்ந்த மாணவ/மாண வியர்கள் உரிய காலத்திற்குள் விண் ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.