ஒட்டன்சத்திரம், செப்.4- கள்ளிமந்தையம் அருகே நண்பரின் திருமண நிச்சயதார்த்ததிற்கு சென்றுவிட்டு திரும்பிய போது இருசக்கரவாகனம் கோவில் சுற்றுச் சுவற்றில் மோதி பள்ளி மாணவர் பலி யானார். பழனி அருகே உள்ள எரமநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பார்த்திபன் (19). இதே ஊரைச் சேர்ந்த தங்கராஜ் என்ப வரின் மகன் வசந்தகுமார் (16) மஞ்ச நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இருவரும் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளி மந்தையம் அருகே உள்ள கரியாம்பட்டியில் நண்பரின் திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் எரமநாயக்கன்பட்டிக்கு புறப்பட்டனர். பார்த்திபன் வாகனத்தை ஓட்ட பின்னால் வந்த குமார் அமர்ந்து வந்துள்ளார். கரியாம்பட்டி - கள்ளிமந்தையம் சாலை யில் அம்மாபட்டியில் வந்துகொண்டி ருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோரம் இருந்த கோவில் சுற்றுச் சுவற்றில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவன் வசந்தகுமார் இறந்தார். பார்த்திபன் படு காயம் அடைந்து ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கள்ளிமந்தையம் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.