இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் மேலாய்க்குடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் கிராம மக்களை வெள்ளியன்று நேரில் சந்தித்து தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கிடைக்கப் பெறுவது குறித்தும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததுடன், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.