districts

img

மேலூர் மாணவியின் மரணத்திற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுத்திடுக!

மதுரை, மார்ச் 10-  மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தும்பைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி கடந்த ஞாயிறன்று தற் கொலை முயற்சி மேற்கொண்டதாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார்.  இச்சம்வத்தில் தொடர்புடைய 8 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத் தில் கைது செய்துள்ளனர். தொடர்ந்து மாண வியின் குடும்பத்தினர் மாணவியின் மர ணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி வரும் நிலையில் வியாழனன்று தும்பைப்பட்டி கிராமத்திற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.   மாணவியின் தாயாருக்கு தமிழக அரசின் சார்பில் மேலவளவு கிராமத்தின் சத்துணவு பணியாளர் பணி ஆணை வழங் கப்பட்டுள்ளது. அப்பணியிடத் தொலை வின் காரணமாக அருகில் உள்ள அ. கோவில்பட்டி கிராமத்தில் பணி ஆணையை மாற்றி வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் பேசி வலி யுறுத்தினார். அவர் உடனடியாக அதை மாற்றி  தருவதாக கூறினார்.  அம்மாணவியின் தந்தைக்கு மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகையை வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வலியுறுத்தப்பட்டது. மேலும் மாணவியின் தம்பிக்கு கல்வி பயில்வ தற்கான உதவித் தொகையினையும் அர சின் மூலம் செய்து தருவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் மாணவியின் மரணத்திற்கு காரணமான கயவர்கள் மீது மிகக் கடுமையான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென தமிழக அரசினை கேட்டுக் கொண் டார்.  இச்சந்திப்பின் போது மாவட்ட வரு வாய் அலுவலர் பிரதோஷ் பாத்திமா, சிபிஎம் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன், தாலுகா குழு உறுப்பினர் அடக்கிவீரணன், சிங்காரவேலன், முத்துலெட்சுமி, தும்பைப் பட்டி ராஜேஸ்வரன் ஆகியோர் உடனி ருந்தனர்.