மதுரை, மே 12- மதுரை நகைக் கடைத் தெரு அருகே உள்ள பச்சரி சிக்காரத் தெரு, மேட்டுக்கம் மாளர் உள்ளிட்ட தெருக்க ளில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் 32 புதிய கண்கா ணிப்பு கேமிராக்கள் பொருத் தப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா சிஐடியு நகைத் தொழிலாளர் சங்க ஏ.அழகே சன் தலைமையில் நடைபெற் றது. எஸ்.மூர்த்தி வரவேற் றார். புதியதாக பொருத்தப் பட்டுள்ள கேமிராக்களை மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார். மதுரை மாநக ராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் டி.நாக ராஜன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிஐடியு தலைவர் வாசு தேவன், சிபிஎம் மாவட்ட செய லாளர் மா.கணேசன் மற்றும் காவல் ஆய்வாளர் எல்.சக்கு பாய், 54 ஆவது மாமன்ற உறுப்பினர் பாஸ்கரன், கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், கோவிந்தராஜ் மற்றும் வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் கோபிநாத், சிஐடியு கபிர், மற் றும் பலர் கலந்து கொண்டனர்.