districts

img

கார்ப்பரேட்களுக்காக மக்களை ஒடுக்கும் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவோம்

மதுரை, ஆக.5-  பொது சிவில் சட்டத்தை வாபஸ்  வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி யும் மணிப்பூர் ,ஹரியானாவில் கல வரத்தை தடுக்க தவறிய ஒன்றிய-மாநில  பாஜக அரசுகளைக் கண்டித்தும் தமிழ்  நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் சார்பில் ஜெய்ஹிந்த் புரம் ஜீவா நகர் சந்திப்பில் சனிக்கிழ மையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  மாவட்டக்குழு உறுப்பினர் கே. குரோனி செந்தில் தலைமை வகித்தார் .மாவட்ட துணைச் செயலாளர்கள் என்.  முகமது அலி ஜின்னா, எஸ். என்.  நவாஸ், கே. பி. சுப்பையா, மாவட்ட துணை தலைவர்கள் எஸ். எம். ஷெரிப்,  என்.சக்தி கணேஷ் ஆகியோர் முன் னிலை வகித்தனர், மாநகராட்சிக்கு துணை மேயர் தி. நாகராஜன், மதுரை  மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலை வர் எஸ். ஏ. லியாகத் அலி, ஜீவா நகர் ஜமாத் பொருளாளர் முகமது பாருக் மைதின், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தை சேர்ந்த அருட்பணி எஸ்.  லாரன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், சிறுபான்மை மக்கள் நல  குழு மாவட்ட தலைவர் கே. அலாவுதீன்,  செயலாளர் என். கணேசன் மூர்த்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு  மண்டல தலைவர் பி. கே. என். அப்துல்  காதர் அலி, காங்கிரஸ் 73 வது வார்டு  மாமன்ற உறுப்பினர் எஸ். எஸ். போஸ், மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் மகபூப் ஜான் உள்ளிட்ட பலர் பேசினர். மாவட்ட குழு உறுப்பி னர் கே.சந்திரசேகரன் ருபிஸ்டன் நன்றி  கூறினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.கண்ணன் பேசுகையில், கல வரங்கள் மூலமாக ஆர்எஸ்எஸ்சும் பாஜக அரசுகளும் விவசாயிகள் பிரச்  சனை. விலைவாசி உயர்வு என அனைத்தையும் மூடிமறைக்கப் பார்க்கின்றன. மணிப்பூரிலும் காஷ்மீரி லும் கனிம வளங்களை பெரும் முத லாளிகள் கொள்ளையடிப்பதற்கு தடை யாக இருக்கும் மக்களை ஒடுக்கு கிறார்கள். அம்பேத்கர் போன்ற மேதை கள் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் சட்டங்களை இயற்றினார்கள். ஆனால் ஒன்றிய பாஜக அரசு, இயற்கை கனிம வளங்களை பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு திறந்து விடுகிறது.  இன்றைக்கு பாஜக ஆட்சியில் வணி கம் மோசமாகியுள்ளது. 100 ரூபாய் ஜிஎஸ்டி வரியில் 67 ரூபாயை ஒன்றிய  அரசும் 37 ரூபாயை மாநில அரசுக்கும்  வழங்குகிறது. இது எவ்வளவு பெரிய  கொள்ளை. இந்தக் கொள்ளைக்கு எதி ராக அனைத்து பகுதி மக்களும் ஒன்று சேர வேண்டும். வேலை வாய்ப்பை சிதைக்கக்கூடிய ஆட்சியாகவும், கல்வியை வியாபாரமாக வளர்க்கக் கூடிய ஆட்சியாகவும் பல்வேறு வழி களில் சமூக நெறிகளை நாசம் செய்யக்  கூடிய ஆட்சியாக பாஜகவின் ஆட்சி உள்ளது. எனவே இந்த பாஜக அரசை நாம் வீழ்த்த வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தத்தை ஒழித் துக்கட்ட வேண்டும். அதற்காக மனித நேயத்தை மக்கள் ஒற்றுமையை நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது என்றார்.