districts

ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திண்டுக்கல், ஏப்.9- திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடை பெற்றது. இதில் பி.டெக் மாணவர் அண்ணா பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்தார்.  கல்லூரி வளாக்தில்  சனிக்கிழமையன்று நடைபெற்ற விழாவில் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர் பி.கே.பத்ரி  கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். ஆர்.வி.எஸ். கல்விக்குழு மத்தின் தலைவர் விஜயஸ்ரீ முனைவர் கே.வி. குப்புசாமி, நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர்களுக்கு பட்டங்கள்  வழங்கப்பட்டன.   இக்கல்லூரியின்  இளங்கலை டெக்ஸ்டைல்ஸ் துறை மாணவர் அர்ஜுன்  ஜெயகிருஷ்ணன் அண்ணா பல்கலைக்கழ கத்திற்குட்பட்ட கல்லூரிகளில் மாநில அள வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றார். இதே போல் வேளாண் பொறியியற் துறையில் அண்ணா  பல்கலைக்கழக அளவில் எம்.அப்துல்காதிர் 2 ஆம் இடத்தையும், பி.ஓவியா  4 ஆம் இடத்தையும், நாகலட்சுமிமோதிபாய் 5 ஆம் இடத்தையும், அட்சயா 6 ஆம் இடத்தையும் பிடித்தனர்.  இவர்களுக்கு ஒரு கிராம் தங்கநாணயமும் சான்றிதழ்களும், மெடல்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி யில் ஆர்.வி.எஸ். கல்வி நிறுவனங்களின் இயக்குநர் முனைவர் வி.கிருஷ்ணக்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர்கள் முனை வர் ஆர்.சரவணன், முனைவர் எம்.ராஜ் குமார், முனைவர் என்.ராஜேஷ்குமார், மற் றும் துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.